என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விபத்து பலி"
- தொடர்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நடைபெற்று வருகிறது.
- முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகன் சஞ்சய் (வயது 14) 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் நேற்று இரவு தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஸ்பிக் நகரில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பஸ் நிறுத்தம் அருகே எதிரே வந்த லோடு ஆட்டோ மீது பலமாக மோதி ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிர் இழந்தார்.
இதுகுறித்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருச்செந்தூர் சாலை ஓரமாக சமீப காலமாக குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக முன் அறிவிப்பு இல்லாமல் முறையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாமல் இருவழி பாதையை ஒரு வழி பாதையாக மாற்றி வருகின்றனர்.
இதன் காரணமாக தொடர்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நடைபெற்று வருகிறது. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இருவரும் எதிரே வந்த வேனில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு விழுப்புரம்-ஆரணி சாலையில் தத்தனூர் அருகே இரு சக்கர வாகனத்தில் செஞ்சி அடுத்த பெரியகரம் கிராமத்தை சேர்ந்த கணவன்-மனைவி குலதெய்வம் சாமி கும்பிட இரு சக்கர வாகனத்தில் வந்த போது கார் மோதி பலத்த காயமடைந்த நிலையில் சசிகுமார் அவருடைய மனைவி மகாலட்சுமி பலத்த காயமடைந்து பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சசிகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேத்துப்பட்டு ஆரணி சாலையில் மேல்வில்வராய நல்லூர் பாலம் அருகே இரு சக்கர வாகனத்தில் மேல்சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நெல் அறுவடை இயந்திர உரிமையாளர் ராஜபக்னேஸ்வரர் அவருடைய நண்பர் சென்னையில் பணிபுரியும் அரசு பேருந்து ஓட்டுனர் வெங்கடேசன் ஆகிய இருவரும் எதிரே வந்த வேனில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
நேற்று இரவு மருத்துவம்பாடி கிராமத்தை சேர்ந்த துளசி என்பவர் தன்னுடைய பேத்தி திருமணத்திற்கு சேத்துப்பட்டு வந்து ஆரணி சாலையில் நடந்து பஜாருக்கு சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி பலத்த காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 10:30 மணி அளவில் ஆரணியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி வந்த லாரியில் இடையங் கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மரவியாபாரி பலராமன் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார் அடுத்தடுத்து 24 மணி நேரத்தில் 3 விபத்தில் 5 பேர் பலியானதில் சேத்துப்பட்டு போலீசார் செய்வதறியாது திணறி வருவது குறிப்பிடத்தக்கது
- ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பாசார் கிராமம் புதிய மாரியம்மன் கோவில் தெருவை திலீப்குமார் மகன் சதீஷ்குமார் (வயது 20). புதிய காலனியை சேர்ந்த கலியபெருமாள் மகன் பழனி (20) புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நடேசன் மகன் வெங்கடேசன்( 20).
இவர்கள் 3 பேரும் நண்பர்கள் தனது நண்பரின் இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு சொந்த வேலை காரணமாக பாசார் கிராமத்திலிருந்து ராமநத்தம் வந்துவிட்டு மீண்டும் சொந்த ஊரான பாசார் கிராமத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாசார் நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஆவட்டி கூட்டு ரோடு பாரத் பெட்ரோலியம் பங்க் எதிரே வந்த போது அவ்வழியே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு 2 பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள். படுகாயம் அடைந்த மற்றொருவர் மீட்கப்பட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவரும் இறந்தார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
- விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே செல்லும் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. அதிவேகம் காரணமாக சில சமயங்களில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரளாவை சேர்ந்த வாலிபர் மற்றும் இளம்பெண் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் இன்று அதிகாலை சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஈரோடு மாவட்டம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக, சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர்களை தாண்டி, கோவை நோக்கி செல்லும் சாலையின் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதி நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரும், இளம்பெண்ணும் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த சித்தோடு போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இறந்தவர்கள் கேரளா மாநிலம் கோத்தப்பாளையம் பகுதியை சேர்ந்த மஞ்சு மனியப்பன் (26) மற்றும் ஹனிசேவியர் (25) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
தூக்க கலக்கத்தில் எதிர்திசையில் உள்ள சாலையின் நடுவே சென்றதால், விபத்து ஏற்பட்டு உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இறந்தவர்களின் முழுவிபரங்கள் குறித்தும், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இறந்தவர்களின் ஆன்மா சுற்றி திரிவதாக அந்த பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.
- பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் கடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-பெங்களூர் செல்லும் சாலையில் அந்தனூர் பக்கிரிப்பாளையம் கிராமங்களுக்கு அருகே அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்ற கார் விபத்தில் சிக்கியது. அதில் பயணம் செய்த குழந்தை, பெண்கள் உட்பட 7 பேர் இறந்தனர்.
இதை தொடர்ந்து அதே பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் கடந்த 23-ம் தேதி இரவு நடந்த சாலை விபத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
மேலும் இந்த பகுதியில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளால் 20-க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி விட்டனர்.
விபத்து நடந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு சொந்தமான விவசாய பண்ணை ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது அந்த பண்ணை செயல்படவில்லை.
சாலையின் இருபுறமும் அடர்ந்த தைலம் மரங்கள் கருவேல மரங்கள், காட்டு மரங்கள் அதிகமாக உள்ளன. அதனால் மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. 20-க்கும் மேற்பட்டோர் பலியான பகுதியில் இறந்தவர்களின் ஆன்மா சுற்றி திரிவதாக அந்த பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.
மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதியில் திடீரென சுழல் காற்று வீசுகிறது. அலறல் சத்தம் கேட்கிறது. சாலையின் குறுக்கே வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் மர்ம உருவம் நடமாடுவது போல அமானுஷ்ய சக்திகள் நடமாட்டம் உள்ளது என அந்த பகுதி மக்களிடையே தகவல் பரவியது.
இதனால் பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். அவ்வழியாக செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
இந்த பேய் பீதி நாளுக்கு நாள் அங்குள்ள மக்களை முடங்க செய்து வருகிறது. இதனால் வீடுகளின் முன்பு வேப்பிலை கட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும். விபத்தில் உயிர் சேதம் நடைபெறாமல் இருக்க வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பம்பை மேளத்துடன் கோவிலில் இருந்து சாமி ஆயுதங்களுடன் ஊர்வலமாக சென்றனர்.
விபத்து நடந்த சாலையின் குறுக்கே மஞ்சள், குங்குமம், விபூதி, கற்பூரம் ஏற்றி பூசணிக்காய் உடைத்தனர். மேலும் கோழி பலி கொடுத்து வழிபாடு செய்தனர்.
- பலியான 2 பேரின் உடல்களும் அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது21). செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று இரவு அவர் உடன் படிக்கும்
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாய் கிருஷ்ணன், கோகுல கண்ணன் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். செங்கல்பட்டு, ராட்டிணங்கிணறு பகுதியில் இருந்து மேலமையூர் நோக்கி அண்ணா நகர் பிரதான சாலையில் சென்று கொண்டு இருந்தபோது திருமணி ஜானகிபுரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டரான நந்தகோபால் என்பவர் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்தார்.
திடீரென சதீஷ் மற்றும் நந்தகோபால் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள்கள் கட்டுப்பாட்டை இழந்து நேருக்குநேர் அதிவேகமாக மோதியது. இதில் இரண்டு மோட்டார் சைக்கிளில் இருந்தவர்களும் தூக்கி வீசப்பட்டனர். மேலும் மோட்டார் சைக்கிள்கள் விபத்து நடந்த இடம் அருகே சாலையில் நடந்து சென்ற திருமணியை சேர்ந்த மேஸ்திரி தணிகாசலத்தின் (46) மீதும் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சட்டக்கல்லூரி மாணவர் சதீஷ், மேஸ்திரி தணிகாசலம், ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சட்டக்கல்லூரி மாணவர்கள் சாய் கிருஷ்ணன், கோகுல், பெயிண்டர் நந்தகோபால் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியான 2 பேரின் உடல்களும் அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் மோகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் 4-ம் கேட் அருகே சில்வர்புரம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 43).
இவர் புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 2 பெண் குழந்தைகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று மாலை மோகன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது மீளவிட்டான் சில்வர்புரம்- தூத்துக்குடி பிரதான சாலையில் சாலை விரிவாக்க பணி காரணமாக குறுகலான சாலையில் செல்லும் போது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்காக திரும்பினார்.
அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் மோகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- இரு வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
- போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கூத்தனப்பள்ளி பகுதியில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் தினந்தோறும் 3 சிப்ட்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11.35 மணி அளவில் கர்நாடக மாநிலத்திலிருந்து ஜல்லிகர்களை ஏற்றிச் செல்வதற்காக கொண்டிருந்த டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது இரவு வேலை முடிந்து தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக் கொண்டு பஸ்சும் வந்து கொண்டிருந்தது.
அப்போது அனுசோனை கிராமம் அருகே இரு வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பிகார் மாநிலத்தை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் லாலுகுமார் (வயது 36) பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயமடைந்த தனியார் நிறுவன ஊழியர்களை மீட்டு ஒசூரில் உள்ள தனியார் மருந்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த கெலமங்கலம் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.
- மணி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
- ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அடுத்த வடமதுரை கொல்லம்பட்டியை சேர்ந்த அழகுமலை என்பவரது மகன் மணி (வயது23). டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். குடிபோதைக்கு அடிமையான மணி நேற்று இரவு கொல்லம்பட்டி பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
அதேபோல் திண்டுக்கல் அருகே செல்லமந்தாடியைச் சேர்ந்த பிச்சைமணி என்பவரது மகன் மணிமாறன் (33). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். குடிபழக்கத்துக்கு அடிமையானதால் மனைவி பிரிந்து சென்று விட்டார். நேற்று இரவு மதுபோதையில் அந்த பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கேசவன், தனிப்படை காவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடம் சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்து காரணமாக அந்த வழியே போக்குவரத்து பாதித்தது.
- விபத்தில் தந்தை, மகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தேரடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 27). தேவகோட்டையில் ஒரு நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இதற்காக புதுக்கோட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி இருந்தார். இவரது மனைவி சுஷ்மிதா(26). இவர்களுக்கு 3 வயதில் ஹரிணி என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று சுப்பிரமணியன் குடும்பத்துடன் திருவப்பூர் கோவில் விழாவுக்கு சென்றிருந்தார்.
பின்பு அவர் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டைக்கு திரும்பினார். மோட்டார் சைக்கிளை சுப்பிரமணியன் ஓட்டினார். முன்னால் குழந்தை ஹரிணியும், பின்னால் சுஷ்மிதாவும் அமர்ந்திருந்தனர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது எதிரே புதுக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி ஒரு தனியார் பஸ் சென்றது.
அந்த பஸ்சை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்த சரவணன் (34) என்பவர் ஓட்டினார். எதிர்பாராதவிதமாக பஸ் சுப்பிரமணியன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சுப்பிரமணியன், குழந்தை ஹரிணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.
சுஷ்மிதா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அக்கம்பக்கத்தினர் சுஷ்மிதாவை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸபத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஆத்திரத்தில் விபத்துக்கு காரணமான பஸ் கண்ணாடியை மக்கள் அடித்து நொறுக்கினர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான சுப்பிரமணியன், ஹரிணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக அந்த வழியே போக்குவரத்து சிறிது நேரம் பாதித்தது. விபத்தில் தந்தை, மகள் இறந்த சம்பவம் புதுக்கோட்டை, விராலிமலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி அருகில் உள்ள ஒரு வீட்டின் சுவற்றின் மீது மோதியது.
- கோகுல கிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட திருமேனி செட்டி தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கோகுலகிருஷ்ணன் (வயது 20). தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு இவர் தனது நண்பருடன் புத்தூரில் உள்ள கடையில் டீ குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்துள்ளார். அப்போது பைகரா வளைவில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி அருகில் உள்ள ஒரு வீட்டின் சுவற்றின் மீது மோதியது.
இதில் கோகுல கிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக வந்தவர்கள் அவர்களை நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த விபத்தில் இளைஞர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் முன்பகுதி முற்றிலும் சேதமானது. இதுகுறித்து நாகை நகர போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்ற வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- ரெயிலில் பயணம் செய்த சுஜன்புடியல் கால் தவறி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மத்தூர்:
கோவை எக்ஸ்பிரஸில் அசாம் மாநிலம் பகுதியை சேர்ந்த சுஜன் புடியல் வயது (35). இவரது தந்தை பகத்புடியல். இவர்கள் இருவரும் அசாமில் இருந்து திருப்பூருக்கு வேலைக்கு செல்ல கோவை எக்ஸ்பிரஸில் பயணம் செய்துள்ளனர். அப்போது நேற்று மாலை 5 மணியளவில் ரெயில் சாமல்பட்டி அருகே உள்ள கே.எட்டிப்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் ரெயிலில் பயணம் செய்த சுஜன்புடியல் கால் தவறி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். அதில் அவர் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுஜன்புடியல் உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இறப்பு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உடன் இருந்த அவரது தந்தை பகத் புடியலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்